வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும்.
ஒவ்வொரு பிறப்பு சம்பந்தமாகவும் அந்த பிறப்பு தொடர்பான படிவம் B23 இன் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை கிராம உத்தியோகத்தரினால் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் பிரிவின் பதிவாளரினால் பிறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. (பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் பட்டியல்).
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் கையளித்தல் வேண்டும். குறித்த CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதி பெற்ற நபர்கள்
- தந்தை
- தாய்
- குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
- பாதுகாவலர்
பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதியான நபர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவம்
- பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி (இல்லையெனில் இலக்கம் 7 ஐப் பார்க்கவும்)
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதிகள்
- தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி
பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் விபரங்களை உள்ளிடுவதற்காக பெற்றோர் இருவரும் பிறந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் செல்ல வேண்டும்.
பிறந்த 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். பிறந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் பிறப்பினை பதிவு செய்து கொள்ள முடியுமென்பதோடு அதற்கு தாமதமான பிறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.
பிறப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர், தகவல் கொடுப்பவருக்கு பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று இலவசமாக வழங்கப்படும்.
பிறந்த திததி மற்றும் இடம் ஆகியவை தாய்க்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மாத்திரம் கூட (சில சமயங்களில் அதைவிடக் குறைவான தகவல்கள் அளிக்கப்பட்ட போதிலும்) பிறப்பினை பதிவு செய்ய முடியும். அங்கு வழங்கப்படும் தகவல்கள் தொடர்பான நிரல்கள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
**நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.
வைத்தியசாலையொன்றில் (அரசாங்க அல்லது தனியார்) நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்
பிறப்பு பதிவு செய்யப்படுவது பிறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும். (பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் பட்டியல்) பிறப்பு நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால் குறித்த இடத்திற்காக நியமிக்கப்பட்ட அல்லது வைத்தியசாலையில் நியமிக்கப்பட்டுள்ள பதிவாளருக்கு பிறப்பு பதிவு செய்வதற்காக அறிவிக்கப்படல் வேண்டும்.
பிறப்பினை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்கள்,
- தந்தை
- தாய்
- குழந்தை பிறந்த நேரத்தில் அருகிலிருந்த நபர்கள், குழந்தையை பொறுப்பேற்றவர்கள்
- வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் தகவலை உட்சேர்ப்பதற்காக பெற்றோர் இருவரும், பிறப்பு நிகழ்ந்த வைத்தியசாலைக்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரிடம் செல்ல வேண்டும்.
பிறப்பினை அறிவிப்பதற்காக உரிய பதிவுசெய்தல் படிவம் CR01 இனை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிறப்பினை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்களினால் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள ;
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR01
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் வைத்தியசாலையினால் வழங்கப்படும் அறிக்கை
- பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
- தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி
அறிவித்தல் விடுப்பவருக்கு இலவசமாக பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று வழங்கப்படும்.
**நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
பதிவுசெய்யப்பட்ட தோட்டமொன்றில் நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்
பிறந்த 07 நாட்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்வதற்கான அறிவித்தலை வழங்குவதற்கு தகுதியுள்ள பின்வரும் நபர்களால் தோட்ட அதிகாரியிடம் (தோட்ட அதிகாரியொருவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது தோட்ட அதிகாரி அறிவித்தல் விடுக்கும் பொறுப்பை ஏற்கவில்லையாயின் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தரிடம்) தெரிவித்தல் வேண்டும்.
தோட்ட அதிகாரி இல்லாத சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தரிடம் பிறப்பு தொடர்பாக அறிவிப்பதாயின் வீட்டில் நிகழ்ந்த பிறப்பைப் பதிவு செய்தல் தொடர்பான விபரங்களைப் பார்வையிடவும்s.
தகவல் கொடுப்பதற்குத் தகுதிபெற்ற நபர்கள்
- தந்தை
- தாய்
- குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
- பாதுகாவலர்
தோட்ட அதிகாரியினால் தோட்டத்தின் பிறப்பு அறிக்கையை உறுதிப்படுத்தி பிறப்பினை பதிவு செய்யும் நபரினால் வழங்கப்படும் பதிவு செய்தல் CR01 படிவத்துடன் மாவட்ட வைத்திய அதிகாரி ஊடாக மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பப்படும்.
மேலதிக மாவட்டப் பதிவாளர் பிறப்பைப் பதிவுசெய்து, பிறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.
அறிவிப்பாளருக்கு தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
** நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
வெளிநாடுகளில் நிகழும் பிறப்புகளை அந்தந்த நாட்டில் பதிவு செய்து கொள்ளல்
இலங்கை பெற்றோருக்கு (குறைந்தது ஒரு தரப்பினர் இலங்கையராக இருத்தல் வேண்டும்) வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் பிறப்புகளை வெளிநாட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
பிறப்புகள் பதிவு செய்யப்படுவது பிறப்பு நிகழ்ந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலேயாகும்
பிறப்பு அறிவிப்பிற்குத் தேவையான பிரகடனப் படிவத்தை இலங்கைத் தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்பிளை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
- தந்தை
- தாய்
- பாதுகாவலர்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், (அசல் மற்றும் நகல் பிரதிகளின் ஒரு தொகுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் பத்திரம்
- பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் (பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலை அறிக்கை)
- பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
- குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய கடவுச் சீட்டு மற்றும் விசா
- தாய் மற்றும் தந்தை வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அச் சான்றிதழ்
அரசாங்கக் கட்டணமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் விதிக்கப்பட்ட தொகையை அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்படல் வேண்டும்.
சினால் விதிக்கப்பட்ட தொகையை அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்படல் வே
ஒரு வருட காலத்திற்குள் அரசாங்க கட்டணத்தைச் செலுத்தி சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூலம் பிறப்பைப் பதிவு செய்து கொள்ள முடியாவிட்டால், குறித்த பிறப்பை காலம் கடந்த பிறப்பு என பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். குறித்த ஆவணங்களை அனுமதிக்காக உரிய தூதரகத்தின் மூலம் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், (அசல் மற்றும் புகைப்படப் பிரதிகளின் ஒரு தொகுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
தேவையான ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் பத்திரம்
- பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் (பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலை அறிக்கை)
- பெற்றோரின் திருமணச் சான்றிதழ் (சான்றுப்படுத்திய பிரதி)
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் (சான்றுப்படுத்திய பிரதி)
- குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் தாய் பயன்படுத்திய கடவுச் சீட்டு மற்றும் விசா
- தாய் மற்றும்/அல்லது தந்தை வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அச் சான்றிதழ்.
மேலும், குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் / நிறைவடைந்ததன் பின்னர் ஆகிய எச் சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்ட தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்படவில்லையெனின், மாளிகாவத்தை மத்திய பதிவறையில் ஆவணங்களை சமர்ப்பித்து பிறப்பினை பதிவு செய்து கொள்ளலாம்.
பிறப்பை அறிவிப்பிற்குத் தேவையான பிரகடனப் படிவத்தை மாளிகாவத்தை மத்தியப் பதிவறையின் கொன்சியூலர் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்பினை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
- தந்தை
- தாய்
- பாதுகாவலர்
அதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவில் பதிவுக் கட்டணமாக ரூ.13,755.00 தொகையைச் செலுத்தி பெற்றுக்கொண்ட பற்றுச் சீட்டை சமர்ப்பித்தல் வேண்டும்.
**அதற்குத் தேவையான தகவல்களைப் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவறையின் பிரதிப் பதிவாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி இல. +94 112 329 773 அல்லது +94 112 433 075 / 071 8255066.