வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.
ஒவ்வொரு மரணத்தையும் பொறுத்தமட்டில், படிவம் B24 இன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று கிராம உத்தியோகத்தரினால் இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
இறப்பு பதிவு செய்யப்படுவது இறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும்.
இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்r.
மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்;
- மரணம் நிகழும் போது அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
- இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர்
- மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
- மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில்,
- இறந்த உடலை புதைப்பவர், தகனம் செய்பவர் அல்லது வேறு வகையில் அது தொடர்பான இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் நபர்.
இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் இறப்பைப் பதிவு செய்து கொள்ள முடியும், அதற்கு தாமதமான இறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.
அறிவிப்பாளருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
வைத்தியசாலையில் (அரசு அல்லது தனியார்) நிகழ்ந்த இறப்புகளை பதிவு. செய்தல்)
மரணம் நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால், அந்த வைத்தியசாலைக்கரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு மரணத்தை பதிவு செய்வதற்கு அறிவித்தல் வேண்டும்.
இறப்பை அறிவிப்பதற்கு தேவையான பிரகடன படிவத்தை (பதிவு செய்தல் CR02 படிவம்) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
இறப்பைப் பதிவுசெய்வதற்காகத் அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்,
- இறந்தவரின் உறவினர்
- இறக்கும் போது அருகில் இருந்த நபர்
- வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR02
- மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
03 மாத காலத்திற்குள் ஒரு மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்தல்
இறப்பு நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள், பின்வரும் தகுதி வாய்ந்த நபர்களால் இறப்பு தொடர்பாக தோட்ட அதிகாரிக்குத் தெரிவித்தல் வேண்டும்.
அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்;
- இறந்தவரின் உறவினர்
- இறக்கும் போது அருகில் இருந்த நபர்
- மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
- மரணம் தொடர்பான இறுதிச் சடங்குகளை மேற்கொள்பவர்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள் இருப்பின்
- இறந்தவரின் மருத்துவ அமர்வு அறிக்கைகள் (இருப்பின்)
தோட்ட அதிகாரியினால் இறப்பு அறிக்கையைக் குறிப்பிட்டு சான்றுப்படுத்தப்பட்ட தோட்ட அதிகாரி இறப்பு அறிக்கையுடன் (பதிவு செய்தல் படிவம் CR02) மாவட்ட வைத்திய அதிகாரி ஊடாக பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலதிக மாவட்டப் பதிவாளரால் இறப்பு பதிவு செய்யப்பட்டு, இறப்புச் சான்றிதழ் உரிய தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்புச் சான்றிதழை தோட்ட அதிகாரியின் அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் ஏற்பட்ட இலங்கையர் ஒருவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்தல்
இறக்கும் போது இலங்கையர் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
இறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் மரணம் பதிவு செய்யப்படுகின்றது.
இறப்பு தொடர்பாக அறிவிப்பிற்குத் தேவையான அறிவிப்புப் படிவம் இலங்கைத் தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இறப்பைப் பதிவுசெய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்குத் தகுதியான நபர்கள்:
- இறந்தவரின் நெருங்கிய உறவின்
- இறக்கும் போது அருகில் இருந்த நபர்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் நகல் பிரதிகளின் தொகுப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்):
- இலங்கைப் பிரசை அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் (விசா/ இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்)
- இறந்தவரின் கடவுச் சீட’டு (இறக்கும் போது செல்லுபடியான)
- குறித்த நாட்டில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
- மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் வைத்தியசாலை அறிக்கை
- இறந்தவரின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- அறிவிப்பாளரின் உறவு முறையை நிரூபிக்கும் ஆவணம் (தேவைக்கேற்ப பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
அரசாங்கக் கட்டணமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் நிர்ணயிக்கப்படும் தொகையை அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்படல் வேண்டும்.
வெளிநாட்டில் மரணித்த ஒருவரின் மரணத்தை இந்நாட்டில் பதிவு செய்தல்
ஒரு வருட காலத்திற்குள் தொடர்புடைய நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உரிய அரசாங்கக் கட்டணத்தைச் செலுத்தி மரணத்தைப் பதிவு செய்துகொள்ள முடியாது போய் விடின், ஒரு வருட காலத்தின் பின்னர் காலம் கடந்த மரணமாக பதிவு செய்து கொள்வதற்கு பின்வரும் ஆவணங்களை மரணம் நிகழ்ந்த நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அதனை குறித்த தூதரகத்தால் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
மேலும், மரணம் வெளிநாட்டில் உள்ள தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பதிவு செய்யப்படாவிட்டால், மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் மரணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
மரணம் தொடர்பாக அறிவிப்பதற்குத் தேவையான பிரகடனப் படிவம் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்தின் Consular பிரிவில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இறந்தவர் இலங்கையர் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
இறந்தவரின் வாழ்க்கைத் துணை, தாய், தந்தை, சகோதரர், பிள்ளை அல்லது அவ்வாறான யாரும் இல்லாத பட்சத்தில் அது தொடர்பாக ஆர்வமுள்ள தரப்பினருக்கு இறப்பைப் பதிவு செய்வதற்கான அறிவிப்பாளராக முன்வரலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் நகல் பிரதிகளின் தொகுப்பு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்):
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் படிவம்
- வெளிநாட்டு இறப்புச் சான்றிதழ்
- இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படாவிட்டால் இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடும் அறிக்கை
- இறந்தவரின் பிறப்புச் சான்றிதழ்
- இறந்தவரின் கடவுச்சீட்டு
- உடல் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தால் கார்கோ பற்றுச் சீட்டு
- அறிவிப்பாளரின் உறவை நிரூபிக்கும் ஆவணம் (தேவையாயின் பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
- இறுதிக் கிரியைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படின் போக்குவரத்து விலைப்பட்டியல்
- வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் (இலங்கையில் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுமாயின்)
- அறிவிப்பாளரின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படப் பிரதி
- அறிவிப்பாளரின் முகவரி மற்றும் உரிய முத்திரை ஒட்டப்பட்ட 9*4 அளவிலான கடித உறை
- வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் Consular பிரிவிற்கு பதிவுக் கட்டணமாக ரூ.8,180/- செலுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட பற்றுச் சீட்டு.
- சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லாத வேறு மொழிகளில் உள்ள ஆவணங்களின் மொழிபெயர்ப்பு
ஆகியன சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
இது தொடர்பான தகவல்களை பதிவாளர் நாயகம் தணைக்களத்தின் மத்திய ஆவணக் காப்பகத்தின் பிரதிப் பதிவாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி இல. ; +94 112 329 773 அல்லது +94 112 433 075/ 071 8255066