Accessibility Tools

Information Icon

இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

இறப்புச் சான்றிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்திலாகும். குறித்த சான்றிதழ் தரவு அமைப்பில் இருப்பின்,  உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 1960.01.01 முதல் 2020.12.31 வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளை தரவு அமைப்பு ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். (தரவு அமைப்பில் உள்ளதா என்பதை அருகிலுள்ள பிரதேச செயலகத்திலிருந்து பரீட்சித்து  உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

தேவையான விண்ணப்பப் படிவத்தை எந்தவொரு பிரதேச செயலகத்தினதும் மாவட்ட பதிவாளர் பிரிவிலிருந்தும் / இணையதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

அறவிடப்படும் கட்டணம்,

  • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரிந்திருப்பின்  ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00 ஆகும். 
  • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரியவில்லை எனின்,  ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00 ஆகும் (இரண்டு ஆண்டுகளுக்கு மிகைப்படாமல்  ஆவணங்களைத் தேட வேண்டியுள்ளதால்)  

உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கியின் (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்குச் செலுத்தி, வங்கிச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றிதழின் பிரதியைக் கோரலாம். 

இறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், சுயமுகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட உறையை மேலே குறிப்பிட்டவாறு கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டு மற்றும் விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து சமர்ப்பித்தல் வேண்டும். 

இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய இறப்புச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு இறப்பு பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் அது தொடர்பாக படிவம் B38 மூலம் தெரிவிக்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள்

அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Online முறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.