காலம் கடந்த இறப்புக்களை பதிவு செய்தல்
மரணம் நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் இறப்பு பதிவு செய்யப்படாமல் இருந்தால், அத்தகைய மரணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
மரணம் நிகழ்ந்து 25 வருடங்களுக்கு மேற்படாத காலத்தினுள் மரணம் தொடர்பான பிரகடனப் படிவம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். (திடீர் மரணம் தவிர)
பிரகடனப் பத்திரம் மரணம் நிகழ்ந்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பிரகடனப் பத்திரத்தை முன்வைக்க தகுதிபெற்ற நபர்கள்
- இறக்கும் போது உடனிருந்த அல்லது
- இறப்பெய்தியவர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவருக்கு பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்.
ஆர்வமுள்ள ஏனையவர்கள்
அறிவிப்புப் படிவத்திற்கான கட்டணம் ரூ. 60.00 ஆகும்.
இறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்
பிரகடனப் படிவத்தை மரணம் நிகழ்ந்த பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பின்வரும் நபர்களில் ஒருவரால் பிரகடனம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- சம்பவத்தை பதிவு செய்வதற்கு தகவல் வழங்கியவர்
- விடயத்தைப் பற்றிய உண்மையை அறிந்த நம்பகமான நபர்
இறப்புச் சான்றிதழின் பதிவுத் திகதி தவிர்ந்த அனைத்து தகவல்களையும் திருத்தலாம்.
பிரகடனப் பத்திரத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 60.00 ஆகும்.
பிரகடனப் பத்திரத்தில் கூறப்பட்ட கோரிக்கையின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக பெற்றுக்கொள்ளத்தக்க எழுத்துப்பூர்வ ஆதாரங்களை முன்வைத்தல் வேண்டும்.