Accessibility Tools

Information Icon

காணியொன்றின் உரிமையைப் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆவணங்களை பதிவு செய்யும் முறைமைக்கு பதிலாக அரசாங்கத்தின் .உத்தரவாதத்துடன் காணியின் அமைவிடம், அதன் எல்லைகள் மற்றும் பரப்பளவு ஆகியவற்றை குறிப்பிடும் கிடை வரைபடம் (நிலவரைபடம்) உள்ளடக்கியவாறான விஷேட தனித்துவமான இலக்கத்தின் கீழ் உரித்து மற்றும் உரிமையின் தன்மையைக் குறிப்பிட்டு காணியின் ஏக உரிமையை பதிவுசெய்வதற்காக 1988 ஆம் ஆண்டின் 21ம் இலக்க உரித்து பதிவுசெய்தல் சட்டம் (பிம்சவிய நிகழ்ச்சித் திட்டத்திற்குரிய சட்டம்) இயற்றப்பட்டது..

 

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக இணைந்து செயற்படும் நிறுவனங்கள்

நில அளவையார் திணைக்களம்

  • உரிமை கோரப்படும் காணிக்குரிய கடத்திரள் நிலவரைபடங்களை தயாரித்தல் / அதன் பிரதிகளை வழங்குதல்.

காணி உரித்து நிர்ணய திணைக்களம்

  • உரிய காணித்துண்டின் உரிமைச் சிக்கல்களைத் தீர்த்தல்
  • சட்டத்தின் பிரிவு 55 இன் பிரகாரம் பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் பிந்தைய உரிமையை உறுதி செய்தல்

பதிவாளர் நாயகம் திணைக்களம்

  • மேற்கூறிய கடத்திரள் நிலவரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு காணி உரித்துகள் நிர்ணய திணைக்களத்தினால் கிடைக்கப்பெறும் துணை ஆவணங்களின் அடிப்படையில் மேற்கூறிய கடத்திரள் வரைபடத்தின் அடிப்படையில் உரித்துகளைப் பதிவு செய்தல்.
  • குறித்த காணி தொடர்பான பிந்தைய கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல்
  • பிரித்தெடுப்பு பிரதிகளை வழங்குதல்